நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பிலான விவரங்களை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம்…
17 மாவட்டங்களில் 146 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு
பாதுகாப்பான இடங்கள் 80 அமைக்கப்பட்டுள்ளன.
குடும்பங்களின் எண்ணிக்கை 63,317
இரண்டு இலட்சத்து 22 ஆயிரத்து 592 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
25 மரணங்கள், ஏழு பேர் காயம், ஒருவர் மாயம்
23 வீடுகள் முழுமையாகவும் 1,253 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.