Our Feeds


Saturday, November 13, 2021

SHAHNI RAMEES

டெங்கு அபாயம் | இதுவரை 15,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

 

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 47.4 சதவீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த வருடமும் 31,162 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக டெங்கு நுளம்பு உருவாகாத வகையில் வீடுகளின் சுற்றுச்சூழல்களை சுத்தமாக வைத்திருக்குமாறு தொற்று நோய் தடுப்புப் பிரிவு பொதுமக்களைக் கோரியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »