Our Feeds


Tuesday, November 30, 2021

Anonymous

12 வயது மகளிடம் சேஷ்டை செய்தவரின் காதை வெட்டிய தந்தை.

 



சுப்பிரமணியம் பாஸ்கரன்


வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில், 12 வயது  மதிக்கத்தக்க  மகளிடம்  சேஷ்டை புரிந்தவரின் காது  அறுக்கப்பட்ட சம்பவமொன்று, கிளிநொச்சி -   தருமபுரம்  பகுதியில், நேற்று முன்தினம் (28) இடம்பெற்றுள்ளது.


அத்துடன், அவரது கை மற்றும்  கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் தருமபுரம்  வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து  மேலதிக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக  சிகிச்சைகளுக்காக யாழ். 

போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.   


இச் சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபரை, தருமபுரம் பொலிஸார் கைது  செய்துள்ளனர். அத்துடன்,  வெட்டப்பட்ட வாளையும்  மீட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »