Our Feeds


Friday, October 15, 2021

Anonymous

SHORT_BREAKING: கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயோதிபர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடையும் அபாயம் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம் எச்சரிக்கை

 



சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 3 ஆம் தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு தடுப்பூசி ஏற்றம் தொடர்பான விசேட ஆலோசனைக் குழு, கோரிக்கை விடுத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.


குறித்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைவதாக சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கை, இன்று அல்லது நாளை வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »