அலி சப்ரியே இந்த அரசாங்கத்திலுள்ள ஒரேயொரு அடிப்படைவாதி. கடந்த அரசாங்கத்திலிருந்து 6 அல்லது 7 முஸ்லிம் அமைச்சர்கள் செய்ததை அலி சப்ரி இப்போது தனியாக செய்கிறார். ரிஷாத் உள்ளிட்டோரிடம் இருந்த அனைவரும் தற்போது அலி சப்ரியிடம் சரணடைந்துள்ளனர். என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தமிழன் பத்திரிக்கைக்கு வழங்கியுள்ள விசேட பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நாட்டிலும், அரசாங்கத்திலும் இருக்கின்ற மிகப்பெரும் தந்திரமான அடிப்படைவாதியாக அலி சப்ரியே இருக்கிறார்.
ஒரு வருடத்திற்கு மாத்திரம் பாதுகாப்பு அமைச்சை என்னிடம் தருமாறு கூறுங்கள். நான் என்ன செய்கிறேன் என்பது தெரியும். எந்த அரசாங்கமாக இருந்தாலும் எனக்கு பாதுகாப்பு அமைச்சை தரச் சொல்லுங்கள். முஸ்லிம் அடிப்படைவாதத்தை முற்றாக ஒழித்துக் காட்டுகிறேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.