Our Feeds


Monday, October 18, 2021

Anonymous

SHORT_BREAKING: ஆசிரியர் சங்கத்தினர் மீது அரசர் கால தண்டனை வழங்க வேண்டும் - ஆளும் SLPP கட்சி MP

 



ஆசிரியர் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மீது முட்டை வீச்சு நடத்தாமல், அரசர் கால தண்டனை வழங்கியாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித் துள்ளார்.


பதுளையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

ஸ்டாலின் என்பவர் கல்வி செயற்பாடுகளை முழுமையாக அரசியல் மயமாக்கியுள்ளார். அரசாங்கத்தால் எதையும் கொடுக்கமுடியும் என்றால் இல்லை என்று அரசு கூறப்போவதில்லை. நிச்சயமாக கொடுக்கவேண்டிய விடயங்களை மக்களுக்கு வழங்கும். யார் இல்லாவிட்டாலும் தனியாக சென்றாவது ஜோசப் ஸ்டாலினுக்கு முட்டை வீச்சு நடத்த தயாராக இருப்பதாக நான் பகிரங்கமாக அறிவித்தேன்.

ஜோசப் ஸ்டாலினை கொழும்பு காலி முகத்திடலுக்கு அழைத்து அரசர் கால தண்டனை வழங்கியாவது இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்தால், தனிப்பட்ட ரீதியில் முயற்சித்தாவது நான் அதனை செய்வேன் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »