Our Feeds


Saturday, October 30, 2021

Anonymous

PHOTOS: நுவரெலியாவில் பல பகுதிகளில் வெள்ளம்! - மக்கள் அவதி!

 



தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிப்பதனால் நுவரெலியாவில் (29) மாலையில் பெய்த கடும் மழையால் நுவரெலியா, பொரலாந்த, கந்தபளை ஆகிய இடங்களில் உள்ள குடும்பங்கள் அதிமாக பாதிக்கப்பட்டனர்.


நுவரெலியாவில் உள்ள  லவர்சிலிப் நீர் வீழ்ச்சியில் நீர் நிலை அதிகரித்தமையால் பொரலாந்த பிரதேசத்தில் உள்ள வீடுகளும், விவசாயமும்  வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக பொரலாந்த ,கந்தபளை பகுதிகளில் பல வீடுகள் சேதம் அடைத்துள்ளது.


நுவரெலியா கந்தபளை ராகலை போன்ற பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.


(செ.திவாகரன் நானுஒயா)









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »