Our Feeds


Saturday, October 30, 2021

Anonymous

PHOTOS: ரிஷாட் பதியுதீனை காண ஆவலுடன் திரண்ட மக்கள் !

 





ஏற்படுத்திய இடைவெளி, ஆதரவாளர்களின் தொடர்புகளை நீட்டித்திருந்தாலும் அன்பின் கனதியை குறைக்கவில்லை.

ஆறுமாத சிறைவாழ்க்கையின் பின்னர் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர் தேர்தல் தொகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளாா்.

நேற்று (29) இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் ரிஷாட் எம்.பியை ஆரத்தழுவி, ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

இதேவேளை வவுனியா, சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த ரிஷாட், மக்களுடன் அளவளாயுள்ளாா்.

கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள், தாய்மார்கள், சிறுவர்கள், சமூகநல விரும்பிகள், சமூகப்பற்றாளர்கள் என பல்வேறு மட்டத்தினரும் இந்த விஜயத்தின் போது கலந்துகொண்டுள்ளனா்.














Subscribe to this Blog via Email :
Previous
Next Post »