எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கண்டி நகரத்தில் இன்று (29) அரசுக்கு எதிரான மாபெரும் எதிர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நாடாளுமன்ற உறுப்பினா் லக்ஷமன் கிரியெல்லவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். ஹலீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜெயவர்தன, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனா்.