'கொழும்பு டியூன்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள, நாட்டின் முதலாவது மணல் மேடு வாகன ஓடுபாதை இன்று (28) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில், இந்த மணல் மேடு வாகன ஓடுபாதை, நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதில் சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள 3 பாதைகள் அமைந்துள்ளன.
அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தலைமையில் இந்த மணல் மேடு பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.