இராணுவத்தின் 72ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அநுராதபுரம், சாலியபுர கஜபா ரெஜிமெண்ட் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பங்குகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தாா்.
அந்த மைதானத்தை திறந்து வைத்ததன் பின்னா் ஜனாதிபதி, கிரிக்கெட் வீரர் திசர பெரேராவுடன் கிரிக்கெட் விளையாடியமை அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிகழ்வில், முன்னாள் கிரிக்கெட்டு வீரரான அஜந்த மெண்டிசும் கலந்துகொண்டிருந்தாா்.