Our Feeds


Tuesday, October 19, 2021

Anonymous

PHOTOS: பிரதமர் மஹிந்த போல் வேடமிட்டு வந்தவரை விரட்டியடித்த விவசாயிகள்

 



அநுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்று வேடம் அணிந்து வந்த ஒருவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து விரட்டுவது போன்றதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


விவசாயிகளின் போராட்டத்தின் போது அங்கு பிரதமரின் முகமூடியை அணிந்துகொண்டு அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் வேடமிட்டு வந்துள்ளார். இதைக் கண்ட ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அவமானப்படுத்தி, தாக்கி அங்கிருந்து விரட்டியடித்து அரசுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு என எமது செய்தியாளர் தெரிவித்தார்.











Subscribe to this Blog via Email :
Previous
Next Post »