Our Feeds


Friday, October 29, 2021

Anonymous

O/L , A/L வகுப்புக்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்

 



க.பொ.த சாதாரண தரம், உயர் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான சுகாதார பரிந்துரைகளும் சுகாதார பிரிவினர்களால் வழங்கப்பட்டுள்ளது.


கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, பாடசாலை மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தி, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரங்களுக்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதாரப் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில், பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தி, கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, ஜனாதிபதி இன்று (29)  இடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின் தெரிவித்துள்ளாா்.

அத்துடன், பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் ஆராயுமாறும், சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி  அறிவுறுத்தியுள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »