(எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸாருக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில் நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க, பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற்றுக் கொள்ள முனைந்ததாக கூறி, புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்துவில்லு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
50 வயதான வண்ணாத்துவில்லு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பத்திரத்ன என்பவரே நேற்று (28) நண்பகல், புத்தளம் பகுதியின் ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.