நான் வருத்தத்துடன் கூறுகிறேன். நான் ஒரு சிறந்த பௌத்தன். கடந்த சில நாட்களாக ஞானசார தேரர் ஊடகங்களில் வந்து பயங்கரவாதம் தொடர்பில் பேசுகிறார்.
தேரரே நாம் உங்கள் காவி ஆடைக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால் தர்கா நகரில் பிரச்சினைகளை உண்டாக்கி, பயத்தை உண்டாக்கியதை போல் மீண்டும் பிரச்சினைகளை உண்டாக்கி நாட்டை அச்சப்படுத்த வேண்டாம் என அவரிடம் நான் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.