ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (28) இடம்பெறவுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பிரதமரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் உள்ளிட்ட மேலும் பல விவகாரங்கள் குறித்த இந்த சந்திப்பில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.