எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேன போட்டியிடவுள்ளாரென அறியமுடிகின்றது.
மாகாணசபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடவுள்ள நிலையில், அதன் மூலமே தஹம் சிறிசேன போட்டியிடவுள்ளார்.
இதற்கு முன்னோடியாக கடந்தவாரம் அவர் சுதந்திரக்கட்சியின் பொலநறுவை மாவட்டத்திற்கான சில பொறுப்புகளை ஏற்றுள்ளார்.
எதிர்வரும் மாகாண தேர்தலில் புதுமுகங்களை களமிறக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.