Our Feeds


Thursday, October 14, 2021

Anonymous

JUST_IN: ஹிஷாலினி வழக்கிலும் ரிஷாத் பதியுத்தீன் சற்று முன் பிணையில் விடுதலை.

 





ரிஷாத் பதியுத்தீன் வீட்டில் வேலை செய்த மலையக யுவதி ஹிஷாலினி உயிரிழந்த விவகாரத்திலும் இன்றைய தினம் ரிஷாத் பதியுத்தீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக முன்னால் அமைச்சரும் அஇமக வின் முக்கியஸ்தருமான அமீர் அலி அவர்கள் சற்று முன் ShortNews செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.


இன்று காலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைதான வழக்கில் ரிஷாத் பதியுத்தீனுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையிலேயே சற்று முன் ஹிஷாலினி விவகார வழக்கிலும் பிணையில் ரிஷாத் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 178 நாட்கள் நிறைவடைந்த நிலையிலேயே இன்று அவர் பிணையில் விடுதலை  செய்யப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »