சந்தையில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பை தொடர்ந்து, புறக்கோட்டை உள்ளிட்ட அதிகளவில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில், பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்யும் நிலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில், புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில், மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக, புறக்கோட்டை ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.