Our Feeds


Monday, October 18, 2021

SHAHNI RAMEES

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் லங்கா IOC நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

 


நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு லங்கா IOC நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


ஒரு லீற்றா் பெற்றோல் விலையை  20 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலையை 30 ரூபாவாலும் அதிகரிக்க   அரசாங்கத்தின் அனுமதியை எதிர்ப்பார்த்துள்ளதாக  IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என அரசாங்கம் தனக்கு அறிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »