யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தமை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடந்த பேச்சு திருப்தியை தரவில்லையென்பதால், இன்று மாலை அரசின் பங்காளிக்கட்சிகள் கூட்டாக அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக அரச கூட்டணி கட்சியொன்றின் தலைவரொருவர் செய்திகளிடம் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் மற்றும் நாட்டின் நிலவரங்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் குறித்து நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டபோதும் ,அரச உயர்மட்டத் தலைவர்களின் பதில் திருப்திகரமானதாக இல்லாதபடியால் இந்த முடிவை எட்டியுள்ளதாகவும், இன்று பிற்பகல் 3 மணிக்கு பிட்டகோட்டே சோலீஸ் மண்டபத்தில் மக்கள் சந்திப்பும் அதன்பின்னர் செய்தியாளர் மாநாடும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய பேச்சுவார்த்தையின்போது பல்வேறு விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டதாக நேற்றிரவு பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்த நிலையில், கூட்டணிக்கு கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.