சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் நடத்தும் போராட்டம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பை அடுத்து இன்று ஆசிரியர் தொழிற்சங்ககங்கள் ஒன்றுகூடி பேச்சு நடத்தின. இதனையடுத்தே போராட்டத்தை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.