Our Feeds


Saturday, October 30, 2021

SHAHNI RAMEES

ஹெரோயின் கடத்தல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள்.


 தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன் சமிலவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம, இன்று (30) உத்தரவிட்டார்.

ஹெரோயின் கடத்தல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்தமைக்காக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் கொழும்பு தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த சிறிநாயக்க பத்திரனாலகே ருவன் சமில பிரசன்ன எனப்படும் தெமட்டகொட ருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரின் சொத்துக்களின் மொத்த பெறுமதி 180 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகவும் பூரணமான மற்றும் தொழில்நுட்ப விசாரணை தேவைப்படுவதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரியதையடுத்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் இவர் தெமட்டகொட சமிந்தவின் சகோதரன் என்றும், இவரது வீட்டில் 4 அதி சொகுசு வாகனங்களும் கிலோ கணக்கில் தங்கமும் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »