கொரோனா தடுப்பூசி அட்டையினை கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார அமைச்சிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாத்துறையின் எதிர்காலம் குறித்து நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயத்தை அமைச்சர் வெளியிட்டார்.
மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் பங்கேற்புடன் அடுத்த வருடம் நாட்டில் பல்வேறு நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.