Our Feeds


Wednesday, October 13, 2021

Anonymous

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் - விரைவில் ராஜினாமா?

 



அடுத்த வருட முதல் காலாண்டில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான அவர் கடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குப் பிரவேசித்திருக்கின்றார்.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் பலத்த சவாலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »