இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா அவசர பயணமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் கொழும்பு வரவுள்ளார்.
அவர், ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை கொழும்பில் தங்கவுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்காவில் ஒருவாரத்துக்கு முன்னர் சந்தித்திருந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் இவ்வாறு இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.