Our Feeds


Monday, October 11, 2021

Anonymous

தெல்கந்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் அதிசொகுசு கார் – லொறி தீக்கிரை

 



தெல்கந்த சந்தியில் அதிசொகுசு காரொன்று, ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளதாக மீரிகம பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.


காரின் சாரதி மற்றும் உதவியாளா் இருவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த விபத்து நேற்று (10) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த காா், வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினால் விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

நேற்றிரவு இரண்டு அதிசொகுசு கார்கள் தெல்கந்த சந்தியிலிருந்து மஹரகமயை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, முன்னால் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் இடதுபுறமாக இருந்த சுவரில் மோதியதன் பின்னா் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்னால் மோதியுள்ளது. மோதியதன் பின்னா் விபத்துக்குள்ளான காா் தீப்பற்றி எரிந்ததாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் அந்த வீதியில் பயணித்தவர்களும் தெரிவித்துள்ளனா்.

ஒருத்தொகை தொழில்நுட்ப உபகரணங்களை தனியாா் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு எடுத்து சென்றுக்கொண்டிருந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்துள்ளனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »