Our Feeds


Tuesday, October 12, 2021

Anonymous

பஸ் கட்டணமும் அதிகரிக்குமா? - அமைச்சர் பதில்

 



எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.


ஊடகங்களுக்கு நேற்று (11) கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கலந்துரையாடல்களை நடத்தி பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லைஎன அவர் கூறினார்.


எனினும், இம்முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.


எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான ஒரு நிலைமை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.


டீசலுக்கான விலையை உயர்வை அரசாங்கம் பொறுப்பேற்று, பஸ் கட்டண்த்தை  அதிகரிக்காமல் இருப்பது அதை விட அபாயகரமானது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »