Our Feeds


Friday, October 15, 2021

Anonymous

சலூன்களிலும் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

 



அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட​தை அடுத்து, வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. இதனை தாங்கிக்கொள்ளவதற்காக, சலூன்களில் முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் ஆகியவற்றுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.


கொழும்பு உள்ளிட்ட ஏனைய நகரங்களிலுள்ள சலூன்களிலும் கட்டணங்கள்
அதிகரிக்கப்பட்டுள்ளன. ஹட்டன்- டிக்கோயா முடித்திருத்துவோர் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், முடி வெட்டுவதற்காக 300 ரூபாய், தாடி
வெட்டுவதற்கு 200 ரூபாய், சிறுவர்களுக்கு முடி வெட்டுவதற்கு 200 ரூபாய்,
முடியை வெட்டி வர்ணம் ​பூசுவதற்கு 800 ரூபாய், மசாஜ் செய்வதற்கு 200
ரூபாய் என விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில், சலூன்களில் விளம்பரங்களும்
ஒட்டப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »