ஒரு கிலோகிராம் புண்ணாக்கு விலை 1000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவிக்கின்றார்.
அதன்படி 1800 ரூபாவாக இருந்த ஒரு கிலோ புண்ணாக்கு இன்று 2800 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு புண்ணாக்கு விலை உயர்ந்ததன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.