Our Feeds


Sunday, October 31, 2021

Anonymous

பதவி துறக்கத் தயாராகும் நீதி அமைச்சர் அலி சப்ரி ? - மேல் மட்டத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளதாக செய்தி

 



ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது கடும் அதிருப்தியை அரச மேல் மட்டத்திற்கு தெரிவித்துள்ளார்.


இந்த நியமனத்தினால் மேற்படி செயலணியூடாக அனைத்து இன மக்களின் நியாயமான நிலைப்பாட்டை முன்வைக்கும் வாய்ப்பில்லாமல் போவதாக அலி சப்ரி அரச மேல்மட்டத்திடம் சுட்டிக்காட்டியுள்ளதாக சொல்லப்பட்டது. 


ஞானசார தேரர் தலைமையில் செயலணியின் செயல்பாடுகள் தொடருமானால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வது பற்றி தீர்மானமொன்றை எடுக்க வேண்டி வருமென அமைச்சர் அலி சப்ரி அரச மேல்மட்டத்திற்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் அறிய முடிந்துள்ளதாக தமிழன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »