Our Feeds


Monday, October 11, 2021

Anonymous

மக்களின் நலனுக்காகவே விலை அதிகரிப்பு- அமைச்சர் ரோஹித்த கருத்து

 



மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்க வைப்பதா அல்லது ஏதேனும் ஒரு வகையில் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதா சிறந்தது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.


பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களை வரிசையில் காத்திருக்க வைப்பதா அல்லது பொருட்களை கொண்டுவந்து சாதாரண விலைக்கு அல்லது சற்று ஏற்றுக்கொள்ளக்கூடிய விலை அதிகரிப்புடன் பொதுமக்களுக்கு வழங்குவதா சிறந்தது என்பது மக்களுக்கு தெரியும்.

எவ்வாறாயினும், மக்களை வரிசையில் காத்திருக்க வைப்பதே எதிர்க்கட்சிகளுக்கு விருப்பம். அவ்வாறான நிலைமை காணப்பட்டால் மாத்திரமே அவர்களால் அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சிக்க முடியுமெனவும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »