Our Feeds


Sunday, October 17, 2021

SHAHNI RAMEES

பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானம் – ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டணி

 


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டாலும் எமது வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »