Our Feeds


Sunday, October 17, 2021

SHAHNI RAMEES

உயிர்த்த ஞாயிறு விசாரனை ஆணைக்குழுவின் சில பகுதிகளை நடைமுறைப்படுத்த முடியாது என ஜனாதிபதி கூறினார் - பேராயர் மல்கம் ரஞ்சித்

 


ஜனாதிபதி, தேர்தலில் வெற்றிபெற்றவுடன் என்னை அழைத்து உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதாகவும் அதன் பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

எனினும் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் கிடைத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதிலுள்ள சிலவற்றை நடைமுறைப்படுத்தினால் தனக்கு அவப்பெயர் ஏற்படும் என தன்னிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக  பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளாா்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் அடிப்படையை கண்டறிவதற்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும். அரசியல் இலாபங்களை அடைந்துகொள்வதற்காக உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களை வழிநடத்தியோர் யார் என்பது கண்டறியப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களுடன் இணையத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பேராயர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தீவிரவாதத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டதல்ல. அந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஏதோவொரு பெரிய சக்தி இருக்கிறது. தாக்குதலின் அடிப்படையை கண்டறிவதற்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும். அரசியல் இலாபங்களை அடைந்துகொள்வதற்காக உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களை வழிநடத்தியோர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »