Our Feeds


Wednesday, October 20, 2021

Anonymous

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினரின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அரசாங்கம் இன்று வழங்கியுள்ளது. - அமைச்சர் ரமேஷ் பத்திரன

 



இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினரின் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதத்தை அரசாங்கம் இன்று வழங்கியுள்ளது. 


அனைத்து இலங்கையர்களிற்கும் கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் விசாரணைகளின் போது அரசாங்கம் எந்த சமூகத்தையும் விசேடமாக இலக்கு வைக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் பொறுப்புவாய்ந்த அரசாங்கம் அனைத்து சமூகத்தினரினதும் நலன்கள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »