Our Feeds


Tuesday, October 12, 2021

Anonymous

ரணில் இருக்கும் வரை ஐ.தே.கட்சிக்கு விடிவு இல்லை

 



ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவராக இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் கதவுகளை மூடுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம தெரித்துள்ளார்.


ஐக்கிய தேசிய கட்சி ஒரு புதிய தலைவரை நியமிக்க வேண்டும். ரணில் விக்ரமசிங்க ஐ.தே.க தலைவராக இருக்கும் வரை ஐக்கிய மக்கள் சக்தி ஐ.தே.கவுடன் கூட்டணி அமைக்க பார்க்காது என்று ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு பலமுறை வலியுறுத்தியதாக ஜயவிக்ரம கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »