Our Feeds


Friday, October 29, 2021

Anonymous

வரப்போகிறது சீமெந்து தட்டுப்பாடு - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 



நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு கட்டுமான பணிகளையும் முன்னெடுப்பதற்கு முடியாமல் போகுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


தற்போது ஏற்பட்டுள்ள சீமெந்து பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் டொலர் பற்றாக்குறை காரணமாக சீமெந்து இறக்குமதியை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் 65 சதவீதம் மட்டுமே இருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பதுளையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »