பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துவரும் நிலையில், பால் விலையும் ஓரிரு நாட்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் பால் பண்ணையாளர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
உள்நாட்டு சந்தையில் திரவ பாலுக்கு கேள்வி அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பால் பண்ணையாளர்களின் நலன் கருதி மில்கோ நிறுவனம் திரவ பாலின் விலையை அதிகரித்துள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.