ஜனாதிபதியினால் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் உருவாக்கத்திற்கான ஜனாதிபதி செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ள 13 நபர்களில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் காலி கிளையின் தலைவர் மௌலவி M.Z மொஹமட்டும் ஒருவராக இணைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் உலமா சபையின் செயலாளர் அர்க்கம் நூராமித் விளக்கமளிக்கையில், செயலணியின் உறுப்பினர்களில் ஒருவராக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் காலி கிளையின் தலைவர் மெலளவி எம்.இஸட்.மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை சிபாரிசின் கீழ் நியமிக்கப்படவில்லை.
அவரது பதவிக்காலம் காலவதியாகியுள்ளது. கொவிட் நிலைமை காரணமாக காலி கிளைக்கு புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய முடியாதுள்ளது. நிலைமை சீராகி புதிய நிர்வாக சபை நியமிக்கப்படும் வரை அவர் தற்காலிகமாக தலைமை பதவி வகிப்பார் என தெரிவித்துள்ளார்.