நிதிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையில், மனைவியை தாக்கி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி பகுதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுவாஞ்சிக்குடி − ஓந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 38 வயதான சந்தேகநபர், வெளிநாட்டிலிருந்து அண்மையிலேயே வருகைத் தந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணம் கையாளப்பட்ட விதம் தொடர்பிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த பெண், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.