Our Feeds


Wednesday, October 20, 2021

Anonymous

மீண்டும் அதிகரிக்கும் அரசி விலை?

 



அரிசி உற்பத்தியாளர்கள்  ஒரு கிலோ கீரி சம்பா அரிசிக்கான விலையை 40 ரூபாவாலும், ஒரு கிலோ சம்பா மற்றும் நாட்டரிசி என்பவற்றை 15 ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் முதித பெரேரா தெரிவித்துள்ளாா்.


அரசாங்கம், கோழியை நரிக்கு  பொறுப்பாக்கியது போன்று அரிசி நிர்ணய விலையை நீக்கி, நாட்டின் அரிசிக்கான விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பாரியளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சிலருக்கு  ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இதற்கு முன்னா் குறைந்த விலையில் பெற்றுக்கொண்ட நெல் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நெல் விலையை அதிகரித்து இலாபம் ஈட்ட முயற்சிப்பதை அரிசி மாபியா என்றே குறிப்பிட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இந்த விலை அதிகரிப்புக்கமைய ஒரு கிலோ கீரி சம்பா 210 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா 155 ரூபாவாகவும், நாட்டரிசி 130 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளா் முதித பெரேரா  மேலும் தெரிவித்துள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »