Our Feeds


Thursday, October 28, 2021

Anonymous

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

 



மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பஸ் சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த தனியார் பஸ் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக, பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »