பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மிக விரைவாக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கு எதிராகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கு தொடரப்படவுள்ளது.
எவ்வாறாயினும் ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இதுவரையில் நிரூபிக்க முடியாமல் போனதால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட மாட்டாது எனவும் குறித்த காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார். (TC)