Our Feeds


Tuesday, October 12, 2021

Anonymous

ரிஷாத் & ரியாஜின் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளுக்கான திகதி அறிவிப்பு

 



நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும்  அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணைகளை இம்மாதம் 15 ஆம் திகதி  எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறுகோரி சட்டத்தரணிகளின் ஊடாக  அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதிகளான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »