(எம்.ஆர்..எம்.வசீம்)
சிறிமா பண்டாரநாயக்கவின் 21ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சூம் தொழிநுட்பத்தில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மதம், மொழி விடயங்களில் அரசியல் கட்சிகளுக்கிடையில் இருந்த கொள்கையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாறுபட்டது. எமது கட்சிக்கு சிறந்த தூரநோக்கு, கொள்கை இருந்தது. பண்டாரநாயக்கவின் கொள்கையும் அதுவாகும். அதனால்தான் சிறிமா பண்டாரநாயக்க தேசிய மற்றும் சர்வதேச தலைவராக முடிந்தது.
அண்மைக்கால வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அனவுக்கு உரப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்வரக்கூடிய தினங்களில் என்னால் பொலன்னறுவைக்கு செல்ல முடியுமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அந்தளவுக்கு விவசாயிகள் உரம் இல்லாமல் விரக்தியடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.