Our Feeds


Wednesday, October 13, 2021

Anonymous

அஸாத் சாலி விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

 



விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் அளுநரான அசாத் சாலியை இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவு பிறப்பித்துள்ளது.


அசாத் சாலி சார்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தாக்கல் செய்துள்ள  நகர்த்தல் மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தனது சேவை பெறுநர் தொடர்பான வழக்கு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது நீண்டகாலமாக உள்ளதால் இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்க வேண்டுமென அவரது கட்டத்தரணி தெரிவித்தார்.

அவரது கோரிக்கையை  ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் அசாத் சாலியை இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டது.

ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அசாத் சாலிக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »