நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன, தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை முதல் தனது இல்லத்தை சுற்றி அடையாளம் தெரியாத குழுவொன்று வெள்ளை வேனில் சுற்றிவருவதாக கூறியே அவர் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.
மேலும், கடந்த வியாழக்கிழமை வெள்ளை வேனில் வந்த சிலர் தனது வீட்டு இலக்கத்தை பார்த்துவிட்டு, இதுதான் வீடு என தெரிவித்த வண்ணம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அயலவர்கள் சிலர் தன்னிடம் தெரிவித்தாகவும், எனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக இரகசிய பொலிஸாரிடம் தான் ஏற்கனவே முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் விசாரணைகளுக்காக தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.