நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று (29) சந்தித்ததன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பான அறிவித்தல் அடுத்துவரும் நாட்களில் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.