கொழும்பு, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில், பள்ளிவாசல் வீதியில் வைத்து பொலிஸ் ஒற்றர் ஒருவரைத் தாக்கி, அவரது கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அவரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரான கொழும்பு மத்தி குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் கைது செய்ய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அவரைக் கைது செய்வதற்காக அவரது வதிவிடத்துக்கு பொலிஸ் குழுவினர் சென்ற நிலையிலும் அவர் இங்கு இல்லை தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
.குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பிறிதொரு நபருடன் சென்று, கொம்பனி வீதி, பள்ளிவாசல் வீதியருகே வைத்து பொலிஸ் ஒற்றரின் கழுத்தைப் பிடித்து தாக்கி, அவரது கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.