Our Feeds


Tuesday, October 19, 2021

SHAHNI RAMEES

ஒருவாரமாக மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் தண்ணீரின்றி தவித்த இருவர்


 அவுஸ்திரேலியாவில் காணாமல் போன இருவர், ஒரு வாரமாக தண்ணீர் கூட கிடைக்காத நிலையிலும் உயிர் பிழைத்துள்ளனர்.

14 வயதான மகேஷ் பேட்ரிக் மற்றும் 21 வயதான ஷாஹுன் ஆகிய இருவரும் அவுஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் காரில் சென்ற போது , மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் காணாமல் போயுள்ளனர்.

குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக ஒரு வாரமாக பொலிஸார் அவர்களை தேடியுள்ளனர். இந்நிலையில் குறித்த இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கிய இருவரும் வெவ்வேறு பாதையில் சென்றுள்ளனர்.

நெடுஞ்சாலையை நோக்கிச் செல்வதற்கு பதிலாக தவறான பாதையில் சென்றதும் பின்பு தண்ணீர் தேடி பல கிலோமீட்டர் அலைந்ததும் தெரிய வந்துள்ளது.

ஒரு வாரமாக தண்ணீர் அருந்தாமல் இருந்த போதிலும் இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »